செல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாடு
ஒரே
இடத்தில் நான்கு பைரவர்கள் இருப்பதால் இவர்களுக்கு சதுர்யுகபைரவர்
என்றும்,சதுர்க்கால பைரவர் என்றும் பெயர்கள் இருக்கின்றன.நமது வாழ்வில்
ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய பைரவர்கள் இவர்கள்! ஆமாம்,நான்கு
யுகங்களையும் இவர்கள் கண்காணித்துவருகிறார்கள் எனில்,இவர்கள்
எப்பேர்ப்பட்டவர்கள்?!!?
இந்த
சதுர்யுகபைரவர்களை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில்
108 ஒரு ரூபாய் வைத்து அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட தாமரைப்பூவை வைத்து
பின்வரும் பொருட்களைக் கொடுத்து பூஜை செய்ய வேண்டும்.
அவைகள்:சிகப்பு அரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளை நான்கு,நான்காக வாங்கிட வேண்டும்.
இந்த
பூஜைப்பொருட்களை பூசாரியிடம் கொடுத்து வளர்பிறை அஷ்டமியில் பூஜை
செய்துவிட்டு,108 ஒரு ரூபாய் நாணயங்களை நமது வீடு அல்லது அலுவலகத்தில்
இருக்கும் பணப்பெட்டியில் வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ
பிறகு,தினமும்
இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்தை 108 முறை ஜபிக்க
வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீர்ந்து,பெரிய
பணக்காரராக ஆகிவிடுவோம்.
அப்படி
ஆவதற்கு,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட
வேண்டும்;மது,போதைப்பொருட்களை நிரந்தரமாகப் பயன்படுத்துவதைக்கைவிட
வேண்டும்;முறையான தாம்பத்தியம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.இதில்
ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்ற முடியாமல் போனாலும் இந்த வழிபாடு பலன்
தராது.
No comments:
Post a Comment